ஒத்திவைக்கப்பட்டது சுதந்திரக் கட்சி மாநாடும் !

188 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனமும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டம் இம்மாதம் 11ம் திகதி சுஹததாஸ உள்ளக அரங்கில் இடம் பெறவுள்ளதாக, அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.