யாழ் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில்

285 0

3-indexயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஆரம்பத்தில் விபத்து என கருத்ப்பட்ட நிலையில், தமது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இருவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் முழுவதும் நேற்றைய தினம் பதற்றமாக காணப்பட்து.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்வர்களின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.