15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு மறியல்

307 0

31-1441015860-law32-600மட்டக்களப்பு – புன்னைச்சோலையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதானவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், எதிர்வரும் 04ஆம் திகதி வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோபாலப்பிள்ளை விஜயகாந் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்த பின் சிறுவர் நன்னடைத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.