நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று ஒட்டுமொத்த நாட்டிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பொறுப்பை இறுதியில் யார் ஏற்றுக்கொள்வார் என்பதுதான் மக்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், நான் ஒரு விடயத்தை வெளிப்படையாகவே கூறியுள்ளேன்.
அதாவது, இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்றேன் என்று அறிவித்துவிட்டேன்.
இனிமேல் இந்த விடயத்தில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. யார் எந்த பிரச்சினையை எமக்கு ஏற்படுத்தினாலும், எவ்வாறான தடைகள் வந்தாலும் நான் இந்தப் பயணத்திற்கு தயார் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்” என சஜித் தெரிவித்துள்ளார்.

