ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் சு.க.வுடன் பேச்சுவார்த்தை – பொதுஜன பெரமுன

256 0

பொதுஜன பெரமுனவுடன் 10 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்குக்கு எந்த வகையில் பாதகமாக அமையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் வெகுவிரைவில் சந்தித்து பேசுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை சுதந்திர கட்சியுடனான கூட்டணி தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,

ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி பொதுஜன பெரமுன மாநாட்டில் அதன் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார். எனவே ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் சுதந்திர கட்சியுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறும். அதன் போது தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றார்.