ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ களமிறக்கப்பட மாட்டார் எனவும், மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்துக்குள் அவரை களமிறக்குவதற்கு எதிர்ப்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
கெகிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
பாராளுமன்றத்தில் பிரதிநிதி இல்லாத 10 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வில் சமல் ராஜபக்ஸவே மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அத்துடன், பசில் ராஜபக்ஸவோ, மஹிந்த ராஜபக்ஸவோ, நாமல் ராஜபக்ஸவோ இதுவரையில் எந்தவொரு இடத்திலும் கோட்டாபய ராஜபக்ஸ வேட்பாளர் என கூறவில்லை என்பது இதற்கான போதிய சான்றாகும். சமல் ராஜபக்ஸவே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு பெரும் சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

