மைத்திரி விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்!

277 0

335c617914f4764277bfe9fed7be4bf8_xlவலி.வடக்கில் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 750 ஏக்கர் காணிகளும் இம்மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் கீரிமலையில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் 100 வீட்டுத் திட்டத்தினைக் கையளிப்பதற்காகவே மைத்திரி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். இதன்போதே குறித்த காணிகளை விடுவிப்பதற்கான அறிவித்தலையும் விடுக்கவுள்ளார்.

காணி விடுவிப்பிற்கான அறிவிப்பு வழங்கப்படும் அத்தினத்திலேயே குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கான நடவடிக்கையை மீள்குடியேற்ற அமைச்சும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.