சிறீலங்காவில் பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ,ஏ!

424 0

download-34சிறீலங்காவில் தேரவாத பௌத்த மதத்தையும் அதன் வணக்கஸ்தலங்களையும் அழிக்கும் முயச்சியில் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈடுபட்டுள்ளதாக மல்வத்துப்பீட துணை மகாநாயகர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

கொரியாவில் மகாஜான பௌத்த மதத்தை அழிக்க அமெரிக்க உளவுத் துறை என்ன வழியைக் கடைப்பிடித்ததோ அதையே தற்போது அது சிறீலங்காவிலும் மேற்கொண்டுவருகின்றது எனவும் தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பான விரிவான விசாரணையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீடொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சிறீலங்காவில் தேரவாத பௌத்த மதத்தையும் அதன் வணக்கத் தலங்களையும் அழிப்பதற்கு அமெரிக்க உளவுத் துறை பாரிய சதித்திட்டமொன்றைத் தீட்டியுள்ளது.

கொரியாவில் மகாஜான பௌத்த மதத்தை அழிப்பதற்கு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பல முயற்சிகளை மேற்கொண்டது. அதேபோல் சிறீலங்காவிலும் உளவுத்துறையினூடாக தேரவாத பௌத்த மதத்தை அழிப்பதற்காக குறிப்பாக மல்வத்துப்பீடம் மற்றும் அஸ்கிரிப் பீடம் என்பவற்றை இல்லாதொழித்து அதை விடவும் மிகப்பெரிய மதத்தலங்களை நிர்மாணித்து இவைதான் புனிதத் தலங்கள் என உலகத்திற்குக் காண்பித்து, தலதா மாளிகை, உபய மகா விகாரை என்பவற்றை அழித்துவிட்டு தேரவாத பௌத்த மதத்தையும் அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனக்கு இத்தகவல் இரகசியமான முறையில் கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வந்து பழத்தட்டு வழங்கி ஆசி பெற்றுச் சென்றாலும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.