கிணறு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

237 0

ஹோமாகம நகரில் உள்ள விடுதி ஒன்றின் பின்னால் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பன்னல பகுதியை சேர்ந்த 42 வயதுடைய அப்துல்லா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவவுதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.