வவுனியாவில் வீடொன்றில் தீ பரவல்

252 0

வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில் சென்றிருந்த சமயம் இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது.

தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத் தீ விபத்தினால் வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுள்ள போதிலும் எவரும் வீட்டில் குறித்த நேரத்தில் இல்லாமையினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை.

இந் நிலையில் குறித்த வீட்டின் மின்சார இணைப்பு நேற்றைய தினமே மீள பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளமையினால் மின்சார ஒழுக்கினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.