போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது

241 0

திக்கோவிட்ட மற்றும் புத்தளம் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 10 மில்லி கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், இவர்கள் சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளத்தில் உள்ள கரம்ப பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 305 மில்லி கிராம் கேரள கஞ்சா மற்றும் 34 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களை வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மாம்பூரி பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.