கிளிநொச்சியில் இன்று கையெழுத்துப் போராட்டம்(காணொளி)

399 0

hand-writingகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமக்கு நீதி வேண்டியும் கையெழுத்துப்போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

காணாமல் போனவர்கள் மற்றும் காhணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு அவர்களது உறவினர்களால்பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கம், கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகியன இணைந்து கிளிநொச்சி டிப்போச்சந்தி, இரணைமடுச்சந்தி, பரந்தன் சந்தி ஆகிய பகுதிகளில் இந்த கையெழுத்துப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

குறித்த இடங்களில் சமநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டியும் இதற்கான பதிலை நல்லாட்சி அரசு மிக விரைவில் தரவேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.