மரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் – கிரியெல்ல

293 0

மரண தணடனையை நீக்கும் சட்ட மூலத்தை விரைவில் பாராளுமன்ற  விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டு சட்டமாக நிறைவேற்றுவோம் என அமைச்சர் லக்ஷ்ன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை தவிர ஏனைய அனைவரும் மரண தண்டனையை எதிர்க்கின்ற நேரத்தில் ஜனாதிபதி மாத்திரம் அடம்பிடிப்பது நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் பந்துளால் பண்டாரிகொட கொண்டுவந்த மரண தணடனையை நீக்கும் தனிநபர் பிரேரணை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.