புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் வெளிவந்துள்ளது!

314 0

1446540555322india-arrets-e1427183861746சிறீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் இயங்கும் இணையத் தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

50 பக்கங்களைக் கொண்ட குறித்த மூலப்பிரதியானது குறித்த இணையத்தளத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியானதாக அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் குறித்த சட்டமூலமானது இதுவரையும் மக்களுக்கு வெளியிடப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் லண்டனிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய நபர் ஒருவருக்கு இந்த நகல் கிடைத்திருப்பதாகவும், இதில் மிகவும் இரகசியத் தன்மை வாய்ந்த பல அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையும், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.