ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன விரைவில் அறிவிக்க வேண்டும்-வாசு

296 0

ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை பொதுஜன பெரமுன விரைவில் அறிவிக்கவேண்டும். அதனை தொடர்ந்து அறிவிக்காமல் இருப்பது குறித்து எமக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அத்துடன் எமது கட்சி சமல் ராஜபக்ஷ்வை ஜனாதிபதி வேட்பாளராக பிரேரித்து இருக்கின்றோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.