மொரகாஹேன வாகன விபத்தில் ஒருவர் பலி

255 0

மொரகாஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  ஒருவர் காயமடைந்துளளார்.

இவ் விபத்து நேற்று இரவு 12.15 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரனை – பாதுக்க வீதியில் ஹொரனை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளாகியது.

இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்தார்.

இவர் மில்லேவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய நபர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்வபம் தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.