மிஹிந்தலை பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

268 0

மிஹிந்தலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை புனித பூமி பகுதி நுழைவாயிலில் இன்று அதிகாலை இளைஞர்கள் சிலருக்கு தாக்குதல் நடத்தியமை தொடர்பிலேயே குறித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியை சேர்ந்த நிபுண மதுஷங்க ரணசிங்க என்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை புனித பூமி பகுதிக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் அவ்விடத்திலிருந்த சில இளைஞர்களுக்கும் குறித்த பிரதேச சபை உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதலின் போது பிரதேச சபை உறுப்பினர் தம் மீது தடி ஒன்றினால் தாக்கியதாக காயத்திற்குள்ளானவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நால்வர் அனுரதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை கைது செய்யபட்டுள்ள பிரசதேச சபை உறுப்பினர் இன்று(17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.