ரம்புக்வெல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
குறித்த இளைஞன் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் வசித்த வந்துள்ள நிலையில் நான்கு நாட்களாக வீட்டிற்கு வந்திருக்கவில்லை. இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளதுடன் அதன் பின்னரே இவ்வாறு வீட்டிற்கு அருகில் இருந்த மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹூன்னஸ்கிரிய – ரம்புக்வெல்ல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய அபேசிங்க என்ற இளைஞனனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.