போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

197 0
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 100 போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்த இருவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

திருகோணமலை, கந்தசாமி கோவில் வீதி மற்றும் நீதிமன்ற வீதி ஆகிய பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரு சந்தேக நபர்களும் போதை தரக்கூடிய மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக, திருகோணமலை தலைமையக போதைப் பொருள் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இருவரும் இன்று பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.