அத்துகல மலையில் இருந்து முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் ஒருவர் பலி

242 0

குருணாகல், அத்துகல மலையில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி பாதாளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்து மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (16) காலை 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துகல மலை உச்சியில் உள்ள விகாரைக்கு சென்று திரும்பி வரும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் 38 வயதுடைய வாரியபொல பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.