கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி பூட்டு

224 0

திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் பிரதேசவாசிகளால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே வீதி மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.