மீன்பிடிக்கச் சென்றவர் மின்னல் தாக்கி பலி

215 0

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மாரவில முதுகட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாரவில முதுகட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவருடன் சென்று மின்னல் தாக்கத்துக்குள்ளான மற்றொருவர் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.