தச்சு வேலைத் தளங்கள் மற்றும் மர ஆலைகளை தடை செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தச்சு வேலைத் தளங்கள் மற்றும் மர ஆலைகளை தடை செய்வதால் பாரியளவிலான வேலைவாய்ப்பை நாடு இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் மரம் வெட்டுவதற்காக வ வளர்ப்புத் திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மரக்குற்றிகளை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தச்சு வேலைத் தளங்கள் மற்றும் மர ஆலைகளை தடை செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.