போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

247 0

​போலி 5000 ரூபா நாணயத் தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் குருவிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அந்தப் பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 5000 ரூபா நாணயத்தாள்கள் 03 மீட்கப்பட்டுள்ளன.

கட்டுகெலியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.