பெரமுன – சுதந்திர கட்சிக்கிடையிலான கூட்டணி தேர்தலை இலக்காகக் கொண்டது-பசில்

277 0

பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி பிரதானமாக தேர்தலை இலக்காகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பசில் ராஜபக்ஷ, இவ்விடயத்தில் முழுமையான  ஒத்துழைப்புடன் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.ஆட்சி பொறுப்பேற்கவுள்ள பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில்   எமது நாட்டின் இறையாண்மையினை பாதிக்கும் வகையில் சர்வதேசத்தின் தலையீடு ஒருபோதும் காணப்படாது.  எமது  நாட்டுக்கு  பொருந்தும் வகையிலான அரச  நிர்வாகமே   முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.