மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது

266 0

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோத மணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சென்விஜயன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகறபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.