வவுனியாவில் இலகு கடன் நிறுவனங்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம்(காணொளி)

406 0

vavuniyaவவுனியாவில் நுண் நிதி இலகு கடன் நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் நுண் நிதி இலகு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில் பெண்களை இலக்கு வைத்து அதிக வட்டிக்கு கடன் வழங்கும் நுண்நிதி இலகு கடன் வழங்கும் நிறுவனங்களை மூடுமாறு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நுண் நிதிக் கடன் ஒரு தூக்கு கயிறு, யுத்தத்தில் துப்பாக்கி நல்லாட்சியில் நுண் கடனா?, கடனைக் கொடுத்து வாழ்வாதாரத்தை சுரண்டாதே, பெண்களுக்கு கடன் திட்டமா? தற்கொலைத் திட்டமா?,நுண் கடன் திட்டம் மீண்டும் அகதி வாழ்க்கையா? என்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தை உலக உணவு தினத்தை முன்னிட்டு காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் வவுனியாவைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.