இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் பதவி விலகல்

338 0

dilrukshi-wickremasinghe-720x480இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றிற்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது.

குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார்.

மேலும் ஜனாதிபதியின் இந்த கருத்து காரணமாகவே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பிய தில்ருக்ஸி இன்று தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் டி.பி. வீரசூரிய உட்பட ஆணையாளர்கள் பதவி விலக உள்ளதாக தெரியவந்துள்ளது.

டப்ளியூ. லால் ரஞ்சித் சில்வா மற்றும் சீ. நெவில் குருகே ஆகியோர் ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக பதவி வகித்து வருகின்றனர்.