மாத்தறை கடலோரத்தில் இருந்து சடலம் மீட்பு

234 0

மாத்தறை கடற்பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கரையொதுங்கி இருந்த சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.