பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவு – ஜனாதிபதி ஆணைக்குழு

339 0

pci_ciமூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரக்னா லங்கா, அவன்கார்ட் நிறுவனங்கள் தொடர்பிலான விசாரணைகள் அவற்றுள்; அடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச் டப்ள்யூ குணதாச தெரிவித்தார்.

அதனை தவிர சிலாபம் மற்றும் குருநாகல் கைத்தொழில் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன.

அந்த அறிக்கைகளை அடுத்த வாரமளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்