போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் உதவுவோம்(படங்கள்)

362 0

unnamed-1தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் ‘விடியலை நோக்கி ‘ செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய எதிர்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கரங்கொடுப்போம் என்று தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் நிறுவுனர் ஆ.யோன்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் தமிழ்த்தேசிய மாணவர் பேரவை யுத்தத்தினால் மற்றும் தமது கல்வியை மேற் கொண்டு செல்ல முடியாமல் நிற்கின்ற அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கின்ற செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில், தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் நிறுவுனர் ஆ.யோன்சன் மற்றும் வித்தியாலயத்தின் முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பேரவையின் முக்கிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

unnamed unnamed-6 unnamed-5 unnamed-4 unnamed-3 unnamed-2