மதூஸின் தகவல்களை வைத்து ஆயுதங்கள் மீட்பு

264 0

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்படும் மாகந்துரே மதூஸினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் பலவற்றை கம்பஹா வெலிவேரிய பிரதேசத்திலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதூஸிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப் பெற்ற ஆயுதங்கள் தொடர்பில் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டுபாய் பொலிஸாரினால் நாடுகடத்தப்பட்ட மதூஸிடமிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.