மைத்திரியின் கருத்தை கண்டிக்கிறார் – மனோ கணேசன்

281 0

mano-ganesonஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த தினத்தில் ஆற்றிய உரை மிகவும் பாரதூரமானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அந்த உரை தொடர்பிலான விளக்கத்தையும் அவரிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசியப் பொலிசார், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய இடம்பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், அந்த நிறுவனங்களின் விசாரணைகள் தொடர்பில் கடும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பில் பதிலளித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தற்போதைய தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க பல தரப்பினர் சதி செய்து வருவதாகவும், அவற்றுக்கு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரும் துணை போகக் கூடாது என்றும் தெரிவித்தார்.