ஜனாதிபதி மைத்திரி இந்தியா செல்கிறார்.

289 0

maithree-modi-400-seithy-news1-415x260ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார்.

பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

8வது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.