மைத்திரிக்கும், மஹிந்தவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை- கோட்டாபய ராஜபக்ஸ

315 0

gotabaya-rajapaksaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகிய நிறுவனங்கள் குறித்து ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் மூன்று கடற்படை தளபதிகள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமைக்கு கவலையை தெரிவிப்பதற்கு முன்னர், ஜனாதிபதி தன்னுடன் கலந்துரையாடல்களை நடாத்தவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி காலம் கடந்தேனும், உண்மையை உணர்ந்துக் கொண்டமையை இட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றவர்களுக்கு கட்டுப்படாது, ஜனாதிபதி நேரடியாகவும் நேர்மையாகவும் செயற்படுவார் என தான் நம்புவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.