சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 3 வெளிநாட்டவர்கள் கைது

246 0

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஸ் நாட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (05) புதுக்கடை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு குடியகல்வு சட்ட திட்டங்களை மீறி வீசா இன்றி நாட்டில் குடியிருப்பதாக முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் நேற்றிரவு (04) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனிமுல்லை பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்ட இவர்கள், 32, 28, 12 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.