வாகனங்களை நிறுத்தத் தடை !

700 0

கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பிலுள்ள அனைத்துப்பாடசாலைகளிலும் நாளைய தினம் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனால் நாளைய தினம் பிற்பகல் ஒரு மணிக்குப்பின்னர் கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாளை மறுதினம் 6 ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் தற்கொலைத்தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.