களவாடல் குற்றச்சாட்டு – இரண்டு பெண்கள் விடுவிப்பு

315 0

298003_223286534394075_100001381909836_606831_940039140_nஐக்கிய அரபு ராச்சியத்தில் களவாடல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் அரச குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான மாளிகையில் இருந்து பெறுமதியான பொருட்களை களவாடியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு அபுதாபி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.