தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன மகள்

270 0

img_0499சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளராயிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன தனது மகளும், இன்றும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். அவர்களும் காணாமல்போன பிள்ளைகள். அவர்களையும் பெற்றோர்கள் தேடியலைகின்றனர்.

இன்று மருதானையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இத்தாய் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து படத்திலிருக்கும் எனது மகளை விசாரித்தேன். அவர் தான் ஒரு மாதத்துக்குள் இதற்குப் பதிலளிப்பதாகக் கூறிச் சென்றார். ஆனால் அவர் இதுவரையும் எந்தவொரு பதிலையும் தெரிவிக்கவில்லை என வவுனியாவைச் சேர்ந்த ஜெயவனிதா என்ற தாய் கண்ணீர்மல்க தெரிவித்தார்.