நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா உணர்வு பூர்வமாக செயற்படுபவர் ; மஹிந்த

312 0

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா உணர்வு பூர்வமாக செயற்படுபவர் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜக்ஷ சபையில் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் பாராளுமன்றம்  விசேடமாக இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருமணிக்கு   சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. 

இதன்போது எதிர்க்கட்சித்தலைவரான மஹிந்த ராஜபக்ஷ் அரசின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள், இராணுவத்தினர் ,உளவுப்பிரிவினரை அவர்கள் நடத்தும் விதம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.  

யாராலும் தோற்கடிக்க முடியாதென தெரிவிக்கப்பட்ட புலிகளை தான் தோற்கடித்ததாகவும் அதற்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது அரச தரப்பில் இருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நன்கறிவார் எனவும் கூறினார்.