புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபவனி இன்று மாங்குளத்திலிருந்து ஆரம்பம்(படங்கள்)

331 0

mankulam-1 யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை தேவேந்திரமுனை வரையிலான புற்றுநோய் வைத்தியசாலைக்கு நடைபவனி, ஏழாம் நாளாக இன்று காலை மாங்குளத்திலிருந்து ஆரம்பமானது.

காராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் விசேட நடைபவனியொன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

தேவேந்திரமுனை வரை 28 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நடைபவனி நேற்றையதினம் இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பமாகி மாங்குளத்தை வந்தடைந்தது.

இன்று காலை 5.30 மணிக்கு மாங்குளம் விகாரையில் வழிபாடுகள் இடம்பெற்று மாங்குளத்திலிருந்து ஆரம்பமாகிய நடைபவனியானது புளியங்குளத்தை சென்றடையவுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரை மேற்கொள்ளப்பட்ட நடைபவனியில் சேகரிக்கப்பட்ட 2.6 மில்லியன் டொலர் நிதியில் யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாகவே மாத்தறை – கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு சுமார் 5 மில்லியன் டொலர்களை சேகரிக்கும் நோக்கில், கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரையிலான பேரணி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

mankulam-2 mankulam-3 mankulam