குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் சடலங்களை, விரைவில் ஒப்படைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த வெளிநாட்டவர்களின் சடலங்களை பொறுப்பேற்றுக் கொண்டுச் செல்வதாயின், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அனுமதியைப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிகளை துரிதப்படுத்தி சடலங்களை ஒப்படைக்குமாறு, பிரதமர் அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.