பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

233 0

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். 

பாடசாலைகள் அனைத்தும் முதலாம் தவணை விடுமுறையையடுத்து 22 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாக இருந்த நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து  22 ஆம் திகதி மற்றும்  23ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் தவணைக்காக  பாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 310 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் 500 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று  வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.