தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பை மாற்றியமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமல்ல-அஜித்

232 0

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பை மாற்றியமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமல்ல. 2020 ஆம் ஆண்டு தெரிவாகவுள்ள ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் உடையவராகவே இருக்க போகிறார். 

புதிய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டமானால் அரசியலமைப்பில் இதுவரையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ள 4 ஆவது உறுப்புரை சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்கள் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவோடு திருத்தப்பட வேண்டும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இனவாதத்தினூடாக இவ்வளவு காலமும் ஆட்சி புரிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை. அதையும் மீறி பொதுஜன முன்னணி சார்பில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால் அவர் தோல்வியின் சின்னமாக கருதப்படுவார் என்றும் பெரேரா குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் காணப்படும் சவாலான தன்மைகள் குறித்து விளக்கமளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவதுரூபவ்

 2020 ஆம் ஆண்டு புதிதாக தெரிவாகவுள்ள ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவே காணப்படுவார். ஆகவே நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமுடையவராகவே இருக்கிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.