துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

236 0

கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொணராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோனகங்ஆர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.