யாழ்ப்பாணமும், கிங்ஸ்டனும் இரட்டை நகரங்களாக பிரகடனம்

246 0

2-cityபிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், எதிர்வரும் 18ஆம் திகதி கிங்ஸ்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் கைச்சாத்திடவுள்ளதாக கிங்ஸ்டன் நகர சபையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தில்இ சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிப்பதுடன் தமிழ் மொழி அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

கிங்ஸ்டன் நகரம் ஏற்கனவே, ஜேர்மனியின் ஓல்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் வனாக்-கு நகரங்களுடன் இதுபோன்ற இரட்டை நகர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளன.

எனினும் இது தொடர்பான அறிவிப்பினை வடமாகாண சபை இதுவரை வெளியிடவில்லை.