இலங்கையை வந்தடைந்தார் றீட்டா ஐசக்!

313 0

03-18-2015rita_iszakஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இக்குழுவினர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து, சிறுபான்மையினத்தவரின் பிரச்சனைகள் தொடர்பாக நேரடியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், இதன்காரணமாக, இக்குழுவினர் கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு பயணம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினரால் தயாரிக்கப்படும் அறிக்கையானது எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கையளிக்கப்படும்.

அத்துடன் இக்குழுவினர், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமை ஆணைக்குழுக்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் எனப் பலருடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.

எதிர்வரும் 20ம் திகதி கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலும் இவர் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், றீட்டா ஐசக் குழுவினரின் இலங்கைக்கான பயணம் குறித்து எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.