கொழும்பில் இரு இடங்களில் தீபரவல்

408 0

கொழும்பு – புளுமென்டல் பகுதியின் குப்பை மேட்டிலும், சொய்சாபுர தனியார் நிறுவனத்திலும் நேற்று  திடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது.

புளுமென்டல் குப்பை மேட்டில் நேற்று  சனிக்கிழமை எற்பட்ட தீப்பரவலை மேற்கு கடற்படை கட்டளை கடற்படையின் தீயணைப்பு படையினர் , இராணுவத்தின் தீயணைப்பு படையினர், கொழும்பு நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் கொழும்பு கரையோர பிரிவின் தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சா புரத்திலள்ள தனியார் நிறுவனமொன்றில் சனிக்கிழமை இரவு நிறுவனத்தின் இரசாயன களஞ்சிய அறையில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டள்ளது என கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்கு விரைந்த பொலிஸார் மொரட்டுவை , தெஹிவலை , கொழும்பு பகுதியின் தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேற்படி தீப்பரவலுகளுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையிலே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.