இராணுவத்தால் 10.5 மில்லியன் ரூபா நிதி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு

252 0

இராணுவத்தில் சேவை புரியும் அனைத்து படையினர்களின் ஒரு நாள் ஊதியத்தின் ஒரு பகுதி ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் ‘Heart to Heart Trust Fund’ நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வேண்டுக்கோளுக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி இராணுவ தலைமையகத்தின் சாஜன் மேஜர் உட்பட அனைத்து படையினர்களின் முன்னிலையில் வைத்து 10.5 மில்லியன் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டுள்ளது. 

இதய நோயளர்களுக்கான சிகிச்சை தாமதம் இன்றி பெற்றுக் கொள்வதற்காக 2014 ஆம் வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் ‘Heart to Heart Trust Fund’ நிதியம் நிறுவப்பட்டது.