இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்!

230 0

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று மாலை 03.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார். 

அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவருடன் மேலும் 07 இந்திய அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உட்பட முப்படை அதிகாரிகளையும் இந்திய பாதுகாப்பு செயலாளர் சந்திக்க உள்ளார்.